தனது சகோதரியின் மகள்களை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த இளைஞன்!
வேல்ஸ் நாட்டில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் தன் சகோதரியின் மகள்மாரை காப்பாற்றுவதற்காக அருவி ஒன்றிற்குள் குதித்து, பிள்ளைகளை மீட்டுக் கரை சேர்த்த நிலையில், அவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
உயிரிழந்தவர் Swanseaயில் வசித்து வந்த மோகன நீதன் முருகானந்தராஜா (வயது 27) ஆவார்.
அவர் தனது உறவினர்களுடன் Brecon Beacons என்னுமிடத்துக்குச் சென்றுள்ளார்.
அவரது குடும்பத்தினர் பலர் அங்குள்ள அருவியில் விளையாடிக்கொண்டிருந்த, சிறிது நேரத்தில் அவரது சகோதரியின் மகள்மார் இருவர் நீரில் மூழ்கியுள்ளனர்.
தன் சகோதரியின் மகள்மாரை குறித்த நபர் மீட்டுக் கரை சேர்த்துள்ளார்.
பின்னர் அவர் நீரில் மூழ்கியுள்ளார்.
நீரில் மூழ்கிய மோகனை மீட்கும் முயற்சி தோல்வியில் முடிய, மறுநாள் அவரது உடலை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர்.