தந்தையின் நண்பர் கைது

மொனராகலை, பகுதியில் சிறுமியை அச்சுறுத்தி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

தனமல்வில பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியே இதன் போது பாதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் தந்தையின் நண்பனான 50 வயதுடைய மது போதைக்கு அடிமையான சந்தேக நபரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

கடந்த 19 ஆம் திகதி சிறுமியின் தந்தையும் சந்தேக நபரும் ஒன்றாக மது அருந்திய நிலையில் தந்தை வீட்டை விட்டு வெளியேறிய போது, ​​சந்தேக நபர் சிறுமியின் கழுத்தில் கத்தியை வைத்து, அவரை அச்சுறுத்தி வீட்டின் தோட்டத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் சிறுமி தாயிடடிம் தெரிவித்ததையடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் தனமல்வில பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.