
தங்க நகை களவு தொடர்பில் மூன்று இளைஞர்கள் கைது
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் கடந்த 29 ஆம் திகதி முறைப்பாடு செய்யப்பட்ட தங்க நகை களவு தொடர்பில் நடவடிக்கை எடுத்த பொலிஸாரால் 22,25,28 வயதுடைய மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
அவர்களிடமிருந்து களவாடப்பட்ட நகைகள் மற்றும் களவாடப்பட்டு அடகு வைக்கப்பட்டு பெறப்பட்ட 165,000 ரூபாய் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.
பதில் பொறுப்பதிகாரி சம்பத் தலைமையில் ஜேம்ஸ், பார்க்க, செனவிரத்ன, சிந்திக்க, குமாரசேகர, நிஸான், யுவகாந்த் மற்றும் காவிந்தி ஆகிய பொலிஸ் அலுவலர்கள் மேற்குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டார்கள்