தங்கத் தூகள்களுடன் நபர் ஒருவர் கைது
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட தங்கத் தூளுடன் நபர் ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
துபாயில் இருந்து இந்தியா ஊடாக வந்த சந்தேகநபரிடம் இருந்து 1 கிலோ 860 கிராம் தங்கத் தூளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீர்கொழும்பைச் சேர்ந்த 37 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
