டொனால்ட் ட்ரம்ப் மீது மற்றுமொரு கொலை முயற்சி

அமெரிக்கா – கோசெல்லாவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கொலை செய்யும் திட்டத்துடன் துப்பாக்கிகளுடன் வந்த நபர் ஒருவரைக் பொலிஸார் கைது செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக டிரம்ப் அறிவிக்கப்பட்டதிலிருந்து அவரை கொலை செய்ய முயற்சிகள் நடந்து வருகிறன.

இந்நிலையில், 3ஆவது முறையாக, டொனால்ட் ட்ரம்பை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது.

49 வயதான வெம் மில்லர் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த நபரிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்