டேன் பிரியசாத் மீது சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூடு!

டேன் பிரியசாத்தை குறிவைத்து சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

லக்சந்த சேவன வீட்டு வசதி வளாகத்தில் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

டேன் பிரியசாத் நான்கு முறை துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில், இரண்டு தோட்டாக்கள் மார்பிலும் இரண்டு தோட்டாக்கள் தோள்பட்டையில் பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் தற்போது ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க