
டெங்கு பரவும் அபாயம்!
நாட்டின் 11 மாவட்டங்களில் டெங்கு பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மழை வானிலை காரணமாக டெங்கு நுளம்புகளின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளதாக சமூக மருத்துவ நிபுணர் பிரஷீலா சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டில் 40,392 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன் 22 பேர் உயிரிழந்தனர்.
தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, டெங்கு நுளம்புகள் பரவுவதைக் கட்டுப்படுத்த சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பிரஷீலா சமரவீர மேலும் தெரிவித்தார்.
