ரிஷப் ஷெட்டி, ருக்மினி வசந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘காந்தாரா -1’ .
இத்திரைப்படம் சர்வதேச அளவில் வெளியாகி ரூ.1000 கோடி வசூலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இத்திரைப்படத்தின் வெற்றி ரிஷப்ஷெட்டியையும், கதாநாயகியான ருக்மிணி வசந்த்தையும் உலக அளவில் பிரபலமாக்கி இருக்கிறது.
இது மட்டுமின்றி சமூக வலைதள பக்கங்களிலும் ரிஷப்ஷெட்டி, ருக்மிணி வசந்த் பெயர்கள் டிரெண்டிங்காகி வருகிறது.