டிப்பர் வாகனம் குடைசாய்ந்து விபத்து

-மூதூர் நிருபர்-

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் மூதூர் ஜின்னாநகர் பகுதியில் ரிப்பர் வாகனம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் வாகனச் சாரதி சிறு காயங்களுடன் உயிர்தப்பியுள்ளார்.

இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

வீதியில் திடீரென குறுக்கிட்ட சிறுவனை காப்பாற்றுவதற்காக திருப்பியதால் கல் ஏற்றி வந்த ரிப்பர் வாகனம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.