டயானா கமகே மீது தாக்குதல் : விசாரணை குழு அறிக்கையை சபாநாயகரிடம் சமர்ப்பித்தது

சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் பெரேரா ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கையை சபாநாயகரிடம் கையளித்துள்ளது.

இந்த குழு இன்று வியாழக்கிழமை  கடைசியாக கூடியதாக அதன் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்தார்.

சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் பெரேரா ஆகியோருக்கு இடையில் ஒக்டோபர் 20 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தினுள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, பாராளுமன்ற அறைக்கு வெளியே தன்னை தாக்கியதாகக் குற்றம் சுமத்தி பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேராவுக்கு எதிராக வெலிக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்