டயர் தொழிற்சாலையில் தீப்பரவல்!

திவுலப்பிட்டியவில் உள்ள டயர் தொழிற்சாலையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீப்பரவலை கட்டுப்படுத்த 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.

இந்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.