ஜே.சி.பி இயந்திரம் இராணுவத்தினரால் பறி முதல்!

கிளிநொச்சி – தருமபுர பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட நெத்தலியிற்றுப்பகுதியில் நேற்று வெள்ளிக்கிpமை ஜே.சி.பி இயந்திரம் மூலம் அனுமதி இன்றி வயல் பகுதியில் மண் அகழ்வு இடம் பெறுவதாக இராணுவத்தினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, சம்பவ இடத்துக்கு விரைந்த இராணுவத்தினர் ஜே.சி.பி இயந்திரத்தை பறிமுதல் செய்துள்ளதுடன், அதன் சாரதியையும் கைது செய்து தருமபுர பொலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சந்தேக நபர் இன்று சனிக்கிழமை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்