
ஜூன் மாதத்தில் ஏற்றுமதி வருமானம் 20 சதவீதத்தினால் அதிகரிப்பு
இலங்கை சுங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, கடந்த ஜூன் மாதத்தில் சரக்கு ஏற்றுமதி மூலம் நாட்டின் வருமானம் 20% அதிகரித்து 1,208.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது.
இது குறித்து, ஏற்றுமதி மேம்பாட்டு சபை வெளியிட்ட அறிவிப்பில், ஆடை, இறப்பர், தேங்காய் தொடர்பான பொருட்கள், உணவு மற்றும் பானங்கள், கடல் உணவுகள் ஆகியவற்றின் ஏற்றுமதி வருவாய் அதிகரித்துள்ளதால், ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆடை மற்றும் புடவை ஏற்றுமதி ஜூன் மாதத்தில் 566.78 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியது.
தேயிலை ஏற்றுமதி 116.49 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளது.
இறப்பர் தொடர்பான பொருட்கள் ஏற்றுமதி மூலம் 102.36 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.