ஜப்பான் தூதுவர் சம்பூர் வருகை

-மூதூர் நிருபர்-

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் இஸொமாடா அகியோ (Isomata Akio)
சம்பூர் பகுதிக்கு நேற்று திங்கட்கிழமை காலை விஜயம் செய்தார்.

இதன்போது ஜப்பான் அரசாங்கத்தின் நிதி உதவியுடன் 2022 ஆம் ஆண்டு புனரமைப்புச் செய்யப்பட்டு விவசாயிகளிடம் கையளிக்கப்பட்ட சம்பூர் – பெரிய குளத்தை இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் நேரில் சென்று பார்வையிட்டார்.

இக்குளமான 9.4 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்புச் செய்யப்பட்டிருந்தது.

சம்பூரிலுள்ள ஏனைய இரண்டு குளங்களை புனரமைப்பு செய்வதற்காக சம்பூர் கமநல சேவை திணைக்களத்தின் உத்தியோகத்தர்களினால் இலங்கைக்கான ஜப்பான் தூதுவரிடம் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க