ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

சில துறைகளை தொடர்ந்தும் அத்தியாவசிய சேவையாக அறிவித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

1979ஆம் ஆண்டின் 61ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவை சட்டத்தின் 2ஆம் பிரிவிற்கு அமைய இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய மின்சார விநியோகம், கனியவள உற்பத்தி மற்றும் பகிர்ந்தளித்தல் என்பன தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் வைத்தியசாலைகள், மருந்தகங்கள் உள்ளிட்டவையும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்