ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு 60 ஆயிரம் பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடவுள்ளனர்

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு 60 ஆயிரம் பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் பாதுகாப்புக்காகவும் விசேட நடவடிக்கைகளுக்காகவும் 54 ஆயிரம் பொலிஸ் அதிகாரிகளை கடமையில் ஈடுபடுத்த முதலில் தீர்மானிக்கப்பட்டிருந்தது , ஆனால் தற்போது அதன் எண்ணிக்கை 60 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தேர்தல் நடவடிக்கைகளுக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். எதிர்வரும் நாட்களில் நாட்டின் பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ள பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.