
சொர்க்கபுரியாக இருந்த நாட்டை நாங்கள் வந்து சீரழித்தது போல கண்ணீர் வடிக்கிறார்கள்
நாடு ஏதோ சொர்க்கபுரியாக இருந்தது போலவும் நாங்கள் வந்து சீரழித்தது போலவும் எதிர்க்கட்சி அன்பர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள், என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பேருவளைப் பகுதியில் மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி,
கண்ணீரை மிச்சம் வையுங்கள் 5 ஆண்டுகளில் இரண்டு மாதங்களே கடந்துள்ளது, நீங்கள் என்னும் நிறைய கண்ணீரை வடிக்க வேண்டியிருக்கும்.
அவர்களுக்கு அவசரம் இருக்கலாம் பாவம், தேர்தல்கள் வேறு வருகிறது, ஆனால் எம்மை நம்பி வாக்களித்த மக்களுக்கு அவசரம் இல்லை.
படிப்படியான ஆனால் உறுதியான மாற்றமே அவர்களது எதிர்பார்ப்பு, நாடு எல்லா விதத்திலும் சீரழிந்துள்ளது, இராணுவ முகாம்களில் இருந்து கூட பாதாள உலகத்தினருக்கு ஆயுதங்கள் விற்கப்பட்டுள்ளது
ஒரு முகாமில் விற்கப்பட்ட 73, T56 துப்பாக்கிகளில் 38 மட்டுமே இதுவரை மீட்டுள்ளோம்.
இராணுவ வீரர்கள் முகாம்களுக்கு வெளியே சென்று பாதாள உலகத்தினருக்கு கூலிப்படையாக கொலைகளை செய்துவிட்டு மீண்டும் முகாம்களுக்குள் வந்திருக்கிறார்கள், 13 இராணுவ வீரர்களை கைது செய்து விசாரிக்கிறோம்.
யாரை நம்புவது என்று தெரியாத நிலையில் குழம்பிய நூல் பந்தாக நாடு உள்ளது படிப்படியாக நாம் சிக்கல்களை சரிசெய்து வருகிறோம்.
ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள், இதை நாம் செய்யாவிட்டால் வேறு யாரும் செய்வதற்கில்லை, என தெரிவித்தார்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்