சைபர் குற்ற முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர் குழு மீட்பு

மியன்மார் சைபர் குற்ற முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர் குழு  மீட்பு

மியன்மாரின் – மியாவதியில் உள்ள சைபர் குற்ற முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களில் மேலும் ஒரு குழு மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட 14 இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்களைத் தாய்லாந்தில் உள்ள பாதுகாப்பான இடமொன்றுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.