
சைகை மொழி விழிப்புனர்வு செயற்திட்டம்
-அம்பாறை நிருபர்-
அம்பாறை மாவட்ட செவிப்புலனற்றோர் இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் காதுகேளாத நபர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கு அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு சார்ந்த சைகை மொழி விளக்கத்தினை காட்சிப்படுத்தும் நடவடிக்கையினை அம்பாறை மாவட்ட செவிப்புலனற்றோர் இளைஞர் சங்கத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இன்று புதன் கிழமை இச் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. பிரதேச செயலாளர் எஸ்.எல் முகம்மது ஹனிபாவிடம் மேற்படி சைகை மொழி விளக்கம் கொண்ட செயலாற்றுகை விநியோகிக்கப்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
