
செவ்வாயில் நீர் உறைந்த நிலையில்
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வருகிறது.
செவ்வாய் கிரகத்தின் மேற்பகுதியில் சஹாரா பாலைவனத்தை விட 100 மடங்கு பெரிதான மரியா எனும் பகுதியில் நீர் உறைந்த நிலையில் பனிக்கட்டியாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
செவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு அது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறது.
தற்போது நாசா வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.