சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் அனைத்து வீரர்களும் தமிழக வீரர்கள்!

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் அனைத்து வீரர்களும் தமிழக வீரர்களாக இருப்பார்கள் என சீமான் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பொதுக்கூட்டத்தின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஒருவர் கூட தமிழர் இல்லை எனவும், நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் களத்தில் இறங்கும் 11 வீரர்களும் தமிழக வீரர்களாக இருப்பார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.