சுவிட்சர்லாந்து : இரசாயன தொழிச்சாலையில் தீ விபத்து

சுவிட்சர்லாந்தின் வலே மாநிலத்தில் உள்ள விஸ்ப் பகுதியில் உள்ள அர்க்சாடா (Arxada) நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு கட்டிடத்தில் உள்ள இரசாயன உலர்த்தியில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக, அப்பகுதியில் புகையும் துர்நாற்றமும் பரவியது.

அர்க்சாடா நிறுவனத்தின் ஒரு கட்டிடத்திலிருந்து புகையும் , துர்நாற்றமும் பரவுவதாக மாகாண காவல்துறை அவசர மையத்திற்கு ஒரு அறிக்கை கிடைத்தது.

அவசர சேவைகள் நிலைமையை விரைவாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தன. ஒரு முன்னெச்சரிக்கை அளவீட்டுக் குழு சுற்றியுள்ள பகுதியில் அளவீடுகளை மேற்கொண்டது.

இந்த விபத்தின் காரணமாக துர்நாற்றமோ அல்லது துர்நாற்ற அபாயங்களோ கண்டறியப்படவில்லை.

சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட பொருள் ஏஎச்எஸ்கே1 (AHSK 1, ) என வகைப்படுத்தப்பட்ட ஒரு களைக்கொல்லியாகும். இது மிகக் குறைந்த அபாய நிலை கொண்ட ஒரு பொருளாகும் எனவும் , இதனால் பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என தெரியவருகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பில் அரசு வழக்கறிஞர் அலுவலகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.