சுவிட்சர்லாந்தின் வலே மாநிலத்தில் பாரிய நிலச்சரிவு : 90 சதவீதமான கிராமம் புதையுண்டுள்ளது- வீடியோ இணைப்பு

சுவிட்சர்லாந்தின் வலே மாநிலத்தில் பாரிய நிலச்சரிவு

சுவிட்சர்லாந்தின் வலே மாநிலத்தில் நேற்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்ற பாரிய நிலச்சரிவில் 90 சதவீதமான நிலப்பிரதேசத்தில் காணப்பட்ட பல நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணிற்குள் புதையுண்டு இடிந்து போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதன்கிழமை பிற்பகல் ஒரு பெரிய பனிப்பாறை சரிந்ததைத் தொடர்ந்து, வலாய்ஸ் மாநிலத்தில் உள்ள லோட்சென்டலில் உள்ள பிளாட்டன் கிராமத்தின் பெரும்பகுதியை பனி, சேறு மற்றும் மரக் குப்பைகளில் சிக்குண்டு ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.

இச்சம்பவத்தில் உள்ளூர்வாசி ஒருவர் காணாமல் போயுள்ளதாக தற்போது வரை கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

பனிப்பாறையின் ஒரு பெரிய பகுதி புதன்கிழமை பிற்பகல் 3:30 மணியளவில் ஒரே நேரத்தில் உடைந்து விழுந்தது. பனிப்பாறை சரிவு ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவான நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சுவிஸ் பொது ஒளிபரப்பாளரான ளுசுகுநுஒவநசயெட இணைப்பில் வெளியிடப்பட்ட வீடியோக்கள் ,பனிப்பாறை சரிந்து விழுவதையும், குப்பைகள் மூச்சடைக்கக்கூடிய வேகத்தில் பள்ளத்தாக்கை நோக்கி பாய்ந்து வருவதையும் அதனுடன் ஒரு பெரிய தூசி மேகமும் சேர்ந்து வருவதையும் காட்டுகின்றது.

 

லோட்சென்டல் பள்ளத்தாக்கின் இருபுறமும் மண் சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக மாகாண அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை நண்பகல் வேளையில் தெரிவித்தனர். புதன்கிழமை நிலச்சரிவு தொடங்கிய மலையான கிளீனர் நெஸ்டோர்னின் நிலைமையும் இன்னும் நிலையற்றதாகவே உள்ளது. பல இலட்சம் கன மீட்டர் பாறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

 

புதன்கிழமை பிளாட்டன் கிராமத்திற்கு மேலே உள்ள முழு பிர்ச் பனிப்பாறையும் இடிந்து விழுந்தது, இதனால் பல மீட்டர் தடிமன் மற்றும் இரண்டு கிலோமீட்டர் நீளம் கொண்ட பள்ளத்தாக்கு தரையில் இவை படிந்துள்ளன.

 

கிராமத்தின் பெரும்பகுதி புதைந்து போயுள்ளதாகவும்  , மண்மேடுகள் இப்போது லோன்சா நதியைத் தடுத்துள்ள நிலையில் இது ஒரு ஏரியை உருவாக்கியதன்  காரணமாக நிலச்சரிவின் போது காப்பாற்றப்பட்ட பல வீடுகளை வெள்ளம் தற்போது மூழ்கடித்ததுள்ளது என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளை மாநில அதிகாரிகளும் , பல பொது அமைப்புக்களும் மேற்கொண்டு வருகின்ற நிலையில் பல நூற்றுக்கணக்கான மீட்பு படையினரும் இப்பகுதியில் சேவையில் ஈடுபட்டுள்ளனர்.

நிலச்சரிவினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புக்கள் மற்றும் சேதவிபரங்கள் இன்னும் உறுதியாக தெரியவரவில்லை .