சுற்றுலா பயணிகளுக்காக இரவு நேரத்தில் சீகிரியா திறக்கப்படுகின்றதா?

வரலாற்று சிறப்புமிக்க சீகிரியா கோட்டையை, சுற்றுலாப் பயணிகளுக்காக இரவு நேரத்தில் திறப்பது குறித்து வெளியான செய்திகளை, புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சு மறுத்துள்ளது.

இரவு நேரத்தில் சீகிரியா  கோட்டையைத் திறப்பது குறித்து, எந்த முடிவும் எடுக்கப்படவில்லை,  என்று குறித்த அமைச்சு  ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தற்போது சமூக ஊடகங்களில் பரவி வரும் இரவு நேரத்தில் விளக்குகளுடன் கூடிய சீகிரியாவின் படம் போலியானது, என்று  புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சுற்றுலா அமைச்சு,  இரவு நேரங்களில்  சுற்றுலாப் பயணிகளுக்காக வரலாற்றுச் சிறப்புமிக்க சீகிரியா  கோட்டையைத் திறக்க முடிவு செய்துள்ளதாக, சமீபத்தில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.