சுற்றுலா கண்காட்சி ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

நாட்டின் மிகப்பெரிய சுற்றுலா கண்காட்சியான ” சஞ்சாரக உதாவ 2025″ இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம், இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு செயற்பாட்டாளர்கள் சங்கம் இணைந்து இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளன.

250 வர்த்தகக் கூடங்களைக் கொண்ட இந்தக் கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை மற்றும் நாளை சனிக்கிழமை நடைபெறும்.

 

  • Beta

Beta feature