சுன்னாகம் பகுதியில் விபத்து – இருவர் பலி
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதி நோக்கி மோட்டார் சைக்கிளிலில் பயணித்த இரண்டு இளைஞர்கள் மின்சாரக் கம்பத்துடன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று மாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுபாட்டை இழந்த நிலையிலேயே இந்த விபத்த நேர்ந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த இருவரும் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 17, 18 வயதுடைய இளைஞர்கள் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.