சீரற்ற வானிலையால் வதுரவ- கீனவல ரயில் போக்குவரத்து பாதிப்பு

சீரற்ற வானிலையால் வதுரவ- கீனவல ரயில் போக்குவரத்து பாதிப்பு

சீரற்ற வானிலை காரணமாக நேற்று வியாழக்கிழமை இரவு வீசிய பலத்த காற்றினால் வதுரவ மற்றும் கீனவல ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதையில் மரம் விழுந்து, பிரதான ரயில் பாதைகள் இரண்டும் மூடப்பட்டதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால், வடக்கு மார்க்கத்தில் மட்டக்களப்பு இரவு அஞ்சல் ரயில் உள்ளிட்ட ரயில்கள் மற்றும் பிரதான மார்க்கத்தில் ரம்புக்கனை நோக்கிச் செல்லும் ரயில்களின் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.