
சீனாவின் பொலிஸ் பிரிவு கணினி மையத்தில் ஊடுருவல்
சீனாவின் பொலிஸ் பிரிவு கணினி மையத்தில் ஊடுருவல் இடம்பெற்று சில தரவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தப்பி சென்றால் சுட்டுக் கொல்ல உத்தரவிடப்பட்டுள்ள சிலரது படங்கள் அடங்கலாக சிறையில் உள்ள ஆயிரக்கணக்கானோரின் படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த தகவல்கள் முன்னதாக வெளியிடப்பட்டிருந்த போதிலும் தற்போதே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மீள்கல்வி முகாம்கள் என்று சீன அரசாங்கம் அழைக்கின்ற முகாம்களில் உய்கர் முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் சுமார் 10 லட்சம் பேர் தங்கவைத்திருப்பதற்காக சீனா மீது பல விமர்சனங்கள் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்டது.
எனினும், இந்த விமர்சனங்களை சீனா மறுத்தது.
அதன்பின், ஜின்ஜியாங்கில் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் இடம்பெற்றபோது பயங்கரவாதத்தை ஒழிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள முகாம்களை அமைத்ததாக சீனா பின்னர் ஏற்றுக் கொண்டது.
இந்நிலையில், தற்போது இவ் ஊடுருவல் மூலம் வெளியாகியுள்ள படங்களில் உய்கர் இன மக்களின் படங்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.