
சித்துப்பாத்தியில் இன்றும் 4 எலும்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம்!
செம்மணி – சித்தப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்றையதினம் இரண்டாவது கட்டத்தில் 28 வது நாளாகவும் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது இன்றையதினம் புதிதாக நான்கு எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
சித்தப்பாத்தி மனிதப் புதை குழியில் இதுவரை 126 மனித எலும்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இன்றையதினம் ஐந்து மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் இதுவரை 117 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.



