சாய்ந்தமருதில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்கள் மீட்பு

 

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பலசரக்கு கடைகளில் இன்று வெள்ளிக்கிழமை திடீர் பரிசோதனை செய்யப்பட்டது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் தலைமையில் பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம். அஸ்லம் மற்றும் டெங்கு களத்தடுப்பு பணியாளர்கள் பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர் ஏ. முஸம்மில் முதலானோர் கலந்து கொண்டனர்.

இதன் போது மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற நொறுக்கு தீனிகளும், நிறக்குறியீடு இல்லாத பானங்களும் கைப்பற்றப்பட்டது டன் அக்கடையின் உரிமையாளருக்கு எதிராக வழக்குத்தாக்கல் களும் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் முறைப்பாடுகளை உரிய ஆதாரங்களுடன் 0753333453, 0776702703 , 077 375 1749 எனும் இலக்கங்களுக்கு அறியத்தாருங்கள், என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.