
சர்வதேச மாதவிடாய் தின நிகழ்வு
-மூதூர் நிருபர்-
சர்வதேச மாதவிடாய் தினத்தை முன்னிட்டு மகளீர் அமைப்புக்கள்,அரச உத்தியோகத்தர்கள்,இளைஞர் யுவதிகளுக்கான விழிப்புணர்வு செயலமர்வு மூதூர் -திரிசீடி மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.
இதனை விழுது அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
“மாதவிடாயை மனம் திறந்து பேசுவோம் அமைதியான வாழ்வை நம்புவோம்” எனும் தொணிப் பொருளின் கீழ் இவ் விழிப்புணர்வுச் செயலமர்வு இடம்பெற்றது.
இச்செயலமர்வில் மூதூர் -சேனையூர் வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி ஹஸ்ஸாலி, விழுது அமைப்பின் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் இதயராணி ஆகியோர் கலந்து கொண்டு மாதவிடாய் தொடர்பான விழிப்புணர்வு விரிவுரை வழங்கியிருந்தனர்.