சர்வதேச நல்லொழுக்க தினத்தை முன்னிட்டு உலருணவுப் பொதிகளை வழங்கிய அமைச்சர் சந்திரசேகரன்

சர்வதேச நல்லொழுக்க தினமானது இன்று வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது.

அந்தவகையில் வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று சர்வதேச நல்லொழுக்க தினமானது கடைப்பிடிக்கப்பட்டது.

அந்தவகையில் சங்கானையில் உள்ள அவர்களது அலுவலகத்தில் இந்த நிகழ்வானது முன்னெடுக்கப்பட்டது.

வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் தலைவர் புஸ்பராசா தலைமை க்ஷயில் நடைபெற்ற இந்த நிகழ்வில் விருந்தினர்களாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீ பவானந்தராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.