
சர்வதேசத்தில் இலங்கையை பேசுபொருளாக்கிய குரங்கு!
இலங்கையில் எதிர்பாராத விதமாக ஒரு குரங்கு நாடு தழுவிய மின் தடையை ஏற்படுத்தி முழு நாட்டையும் இருளில் ஆழ்த்திய சம்பவத்திற்குப் பிறகு இலங்கை சர்வதேச அளவில் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11:30 மணியளவில் நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டது ஒரு குரங்கு துணை மின்நிலையத்தில் நுழைந்ததால் அமைப்பு சீர்குலைந்து மின்தடை ஏற்பட்டது.
. ஆரம்பத்தில் தொழில்நுட்பக் கோளாறு என்று கருதப்பட்ட இந்த சம்பவம் உண்மையில் குரங்கினால் ஏற்பட்டது என்பதை எரிசக்தி அமைச்சர் உறுதிப்படுத்தினார்.
மின் இணைப்பை சரிசெய்ய அதிகாரிகள் கிட்டத்தட்ட 5 முதல் 6 மணி நேரம் உழைத்தனர்இ படிப்படியாக பல்வேறு பகுதிகளுக்கு மின்சாரம் திரும்பியது.
மின் தடையின் வினோதமான தன்மை உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளதுஇ இலங்கை குரங்கு எதிர்பாராத விதமாக சர்வதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.