சர்ச்சைக்கு மத்தியில் திருவள்ளுவர் சிலை திரை நீக்கம்

-அம்பாறை நிருபர்-

அம்பாறை – கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கிட்டங்கி வீதியில் அமைந்துள்ள கல்முனை தமிழர் கலாசார பேரவை வளாகத்தில் திருவள்ளுவர் சிலை பொலிஸாரின் பாதுகாப்பிற்கும் மத்தியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சிலை திரை நீக்கம் செய்யும் நிகழ்வில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மேலாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மற்றும் வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே அதிசயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்தி பேரவை உறுப்பினர்கள் உட்பட கல்முனை பிராந்திய இளைஞர் அமைப்புகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை கல்முனை பகுதியில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலை அனுமதியற்ற கட்டுமானம் என குறிப்பிட்டு ஏழு நாட்களுக்குள் அகற்ற மாநகர சபை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் முறைப்பாட்டிற்கமைய கல்முனை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் அஹமட்லெப்பை நாதீர் கல்முனை கல்லடி நில குளத்தில் கல்முனை மாநகர சபையின் அனுமதியின்றி சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை திறப்புவிழா நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்து கல்முனை தமிழ் காலாச்சார பேரவை தலைவர் செயலாளர் உப தலைவர் ஆகியோருக்கு 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை பிரிவு 106(1) இன் கீழான தடை உத்தரவு பிறப்பித்திருந்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்