சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் கட்டாக்காலி மாடுகளினால் அதிக விபத்துக்கள்

 

-அம்பாறை நிருபர்-

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் காலை முதல் மாலை வரை பிரதான வீதிகள் உள்ளக வீதிகளில் கட்டாக்காலி மாடுகளினால் விபத்துக்கள் ஏற்படுகின்றன.

சம்மாந்துறை விளினியடி சந்தியில் அண்மையில் மாடுகளால் விபத்து ஏற்பட்ட முச்சக்கரவண்டி சேதமடைந்ததுடன் சாரதி காயமடைந்திருந்தார்.

இது தவிர இன்று செவ்வாய்க்கிழமை மோட்டார் சைக்கிள்கள் இரண்டுடன் கட்டாக்காலி மாடுகள் மோதியதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.