சம்மாந்துறையில் முன்பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு

-சம்மாந்துறை நிருபர்-

முன் பிள்ளைப் பருவ தேசிய வாரத்தினை முன்னிட்டு முன்பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நேற்று புதன் கிழமை சம்மாந்துறை அல் அஸ்ஹர் வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து அல் ஹாஜ் எஸ்.எல். முஹம்மது ஹனீபா ஆலோசனையில், உதவிப்பிரதேச செயலாளர் சட்டத்தரணி யூ.எம். அஸ்லம் வழிகாட்டலின் கீழ், முன் பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.எச். சம்றினா இ ஜே.எஸ். றியானா ஆகியோரது நெறியாள்கையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வளவாளராக ஆயுள் வேத வைத்தியர் எம்.சி. காலித், அல் அஸ்ஹர் வித்தியாலய அதிபர், சமூக சேவைப்பிரிவின் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் திருமதி பசீல், கலாசார உத்தியோகத்தர் றஸ்மி மூஸா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்