
சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்து: சிகிச்சை பலன் இன்றி பெண் மரணம்
-கிளிநொச்சி நிருபர்-
கிளிநொச்சியில் நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை சமைத்துக்கொண்டிருந்த பெண்ணின் உடலில் தீ பிடித்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி இன்று செவ்வாய்க்கிழமை உயிர் இழந்துள்ளார்.
மருத நகர் பகுதியை சேர்ந்த பரசுராமன் பரமேஸ்வரி (வயது – 58) என்ற பெண்ணே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
மருதநகர் பகுதியில் உள்ள வீட்டில் குறித்த பெண் சமைத்துக்கொண்டிருந்த நிலையில் எரிவாயு சிலிண்டர் கசிவு காரணமாக அவரது ஆடையில் தீ பிடித்து எரிந்துள்ளது.
குறித்த பெண் பலத்த காயங்களுடன் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி இன்று உயிர் இழந்துள்ளார்.
சம்பவம் நடந்தபோது வீட்டில் அவர் மட்டும் இருந்துள்ளமை தெரிய வந்துள்ளதுடன் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்