சமைத்துக்கொண்டிருந்த பெண்ணின் ஆடையில் தீ

கிளிநொச்சியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சமைத்துக்கொண்டிருந்த பெண்ணின் உடலில் தீ பிடித்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத நகர் பகுதியை சேர்ந்த 58 வயதுடைய பெண்ணே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

மருதநகர் பகுதியில் உள்ள வீட்டில் பெண்ணொருவர் சமைத்துக்கொண்டிருந்த நிலையில் எரிவாயு சிலிண்டர் கசிவு காரணமாக அவரது ஆடையில் தீ பிடித்து எரிந்துள்ளது.

குறித்த பெண் பலத்த காயங்களுடன் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டார்.

சம்பவம் நடந்தபோது வீட்டில் அவர் மட்டும் இருந்துள்ளமை தெரிய வந்துள்ளதுடன் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்