சமூக வலைத்தளங்களில் தனிப்பட்ட விபரங்களை வழங்க வேண்டாம்

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் போலியான செய்திகளுக்கு அமைய, வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறுபொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பொது மக்களுக்கு இந்த அறிவித்தலை வழங்கியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் அவ்வாறான போலியான தகவல்கள் தொடர்ந்தும் பரப்பப்படுவதாக அந்த ஆணைக்குழுவின் பிரதி பணிப்பாளர் மேனகா பத்திரன தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்