
சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண்!
பத்தேகம, மஹாலியான கெவத்த பகுதியில் 48 வயதுடைய பெண் ஒருவர் தனது வீட்டிற்குள் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பல நாட்களாக அந்தப் பெண்ணை காணவில்லை என்றும், வீட்டின் விளக்குகள் எரியாமல் இருப்பதையும் கண்ட பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு தகவல் அளித்தனர்.
இரத்தப்போக்கு அறிகுறிகளுடன் அவரது உடல் அறையின் தரையில் நிர்வாணமாகக் கிடந்ததை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
இறந்தவர் பத்தேகம, சந்தராவல பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நீதவான் விசாரணைக்காக சடலம் சம்பவ இடத்திலேயே பொலிஸ் பாதுகாப்பில் உள்ளது.
பத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
