சட்ட நடவடிக்கை எடுக்காமல் லஞ்சம் கேட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!
ரத்தொலுகம பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 3000 ரூபாய் லஞ்சம் பெற்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
ரத்தொலுகம பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டதாக, லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
போக்குவரத்து குற்றத்திற்காக சட்ட நடவடிக்கை எடுக்காமல், தனது ஓட்டுநர் உரிமத்தை திருப்பித் தர குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் லஞ்சம் கேட்டதாக முறைப்பாடு அளித்தவர் தெரிவித்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை மாலை ரத்தொலுகமவில் வைத்து குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டார்.