சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது

 

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குமாரசாமிபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக நேற்று திங்கட்கிழமை குறித்த பகுதி பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டது.

இதன்போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டதுடன் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் 80 லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி எம் எஸ் கே திசாநாயக்க தெரிவித்துள்ளார்