சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 6 வெளிநாட்டு பிரஜைகள் கைது
சீதுவ, அமண்டொலுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வீசா இன்றி தங்கியிருந்த 06 வெளிநாட்டு பிரஜைகள் நேற்று செவ்வாய்க்கிழமை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, 18, 23, 26, 39 மற்றும் 43 வயதுடைய பங்களாதேஷ் பிரஜைகளே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
