சட்டவிரோதமாக டீசல் விற்பனை : ஒருவர் கைது

அனுராதபுரம் – கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் டீசல் விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த நபரை 1,225 லீற்றர் டீசலுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அனுராதபுரம் விமானப்படை புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படையின் தம்புள்ளை முகாமை சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்று கலென்பிந்துனுவெவ, மொரகொட மீகஸ்வெவ, நாமல்புர பிரதேசத்தில் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளது. இதன்போது, பாதுகாப்பற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 1,225 லீற்றர் டீசல் மற்றும் அது தொடர்பான உபகரணங்களுடன் அதே பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மொரகொட காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்