சட்டவிரோதமாக இந்தியாவில் தஞ்சமடைந்த 10 பேர்

சட்டவிரோதமாக நாட்டில் இருந்து நேற்று சனிக்கிழமை அதிகாலை பத்து நபர்கள் இந்தியா இராமேஸ்வரத்திற்கு சென்றுள்ளனர்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 8 ஆம் வட்டாரத்தை சேர்ந்த 10 நபர்களே இவ்வாறு இராமேஸ்வரத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.

மூன்று குடும்பத்தை சேர்ந்த இவர்களில் ஒரு கைக்குழந்தை மூன்று சிறுவர்கள் நான்கு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் உள்ளடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்