சட்டத்தரணி அரிவாளால் வெட்டிக் கொலை

முன்னணி சட்டத்தரணியான 35 வயதுடைய பெண் ஒருவர் பெங்கிரிவத்தையில் உள்ள அவரது இல்லத்தில் அவருடைய சாரதியால் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறையைச் சேர்ந்த சந்தேக நபர், பாதிக்கப்பட்ட பெண்ணின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் ஜெயனி செவ்மினி டி சில்வா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை கைது செய்ய மிரிஹான பொலிஸார் முற்பட்ட போது பெந்தர ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற போது சந்தேக நபரை பெந்தர பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

45 வயதான சந்தேக நபர் மிரிஹான பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடந்து வருகின்றன.