சடலத்துடன் உடலுறவு கொண்ட இளைஞன் : தண்டனையை ரத்து செய்த நீதிபதி!

இந்தியாவில் சடலத்துடன் உடலுறவு கொண்டவருக்கு தண்டனையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கர்நாடகா, துமகூரு மாவட்டத்தை சேர்ந்த ரங்கராஜ் (வயது – 22) என்ற நபர் இளம்பெண் ஒருவரை கொலை செய்து அந்த சடலத்துடன் உடலுறவு கொண்டுள்ளார். இந்த வழக்கில், ரங்கராஜுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட நிலையில் பிணத்துடன் உடல் உறவு கொண்டதற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, கர்நாடக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் குற்றவாளியான ரங்கராஜனுக்கு கொலை செய்த குற்றத்திற்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை செல்லும் எனவும் பிணத்துடன் உடல் உறவு கொண்ட குற்றத்திற்காக வழங்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனை ரத்து செய்தும் நீதிபதிகள் வீரப்பா மற்றும் வெங்கடேஷ் நாயக் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

சட்டப்படி ஒருவரின் இறந்த உடலை மனிதராக கருத முடியாது.அதனால் இந்திய தண்டனை சட்டம் 375, 377 (இயற்கைக்கு மாறான உடலுறவு) ஆகியவை குற்றமாக பொருந்தாது. 376வது கற்பழிப்பு பிரிவின் கீழ் அது தண்டனை உரிய குற்றம் ஆகாது. இதனால் இறந்துபோன ஒருவரின் உடலுடன் உறவு கொள்வது குற்றம் ஆகாது என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்