க.பொ.த சாதாரண தரப் பரீட்சை : மீள் திருத்தம் தொடர்பான அறிவிப்பு!
2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் இன்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின்படி, 237,026 மாணவர்கள் உயர் தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்தார்.
இம்முறை பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 73.45% வீதமானவர்கள் உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.