கோலூன்றி பாய்தலில் தேசிய சாதனை படைத்த அருந்தவராசா புவிதரன்
இலங்கை இராணுவ தடகள வீரர் அருந்தவராசா புவிதரன் கோலூன்றி பாய்தல் போட்டியில் தேசிய சாதனையை பதிவு செய்துள்ளார்.
2025 இராணுவ தடகள சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இடம்பெற்ற கோலுன்றிப் பாய்தல் நிகழ்வில் அ. புவிதரன் சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
இலங்கை இராணுவ மின்சார மற்றும் இயந்திர பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் ஏ. புவிதரன் இன்று செவ்வாய்க்கிழமை கோலூன்றிப் பாய்தல் போட்டியில் 5 மீற்றர் மற்றும் 18 சென்ரிமீற்றர் உயரம் தாண்டி இந்த புதிய தேசிய சாதனையைப் படைத்துள்ளார்.
இந்த வெற்றியின் மூலம், கோலூன்றிப் பாய்தல் போட்டியில் இலங்கை இராணுவ சாதனை மற்றும் இலங்கை இராணுவ தடகள சம்பியன்ஷிப் சாதனை இரண்டையும் புவிதாரன் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
இத்தடகள போட்டித் தொடர் 2025 ஓகஸ்ட் 18 – 20 வரை தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.