கோர விபத்து: இளம் தம்பதி பலி
அனுராதபுரம் இராஜாங்கனைப் பிரதேசத்தில் இன்று புதன் கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.
அனுராதபுரம் பலுகஸ்வெவை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய கணவன் மற்றும் 26 வயதுடைய மனைவி மரணித்துள்ளனர்.
குறித்த தம்பதியினர் பயணித்த ஹயஸ் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் அருகில் இருந்த மரத்துடன் மோதியுள்ளது. இதன்போது வாகனத்தை செலுத்தி சென்ற கணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் படுகாயங்களுடன் நோயாளர் காவுகை வாகனத்தில் இராஜாங்கனை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட மனைவி இடைவழியில் உயிரிழந்துள்ளார்.
இருவரினதும் சடலங்களும் இராஜாங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்